கர்நாடகாவில் கோர விபத்து…தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உள்பட 12 பேர் பரிதாப பலி!
Mar 6, 2020, 09:19 IST1583466593000
கர்நாடகா மாநிலம் குனிக்கல்லில் 2 கார்கள் மோதியதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம் குனிக்கல்லில் 2 கார்கள் மோதியதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சீக்கணப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 10 பேர் தர்மஸ்தலா கோவிலுக்கு சுற்றுலா சென்று திரும்பியுள்ளனர். அப்போது காரானது தும்கூர் மாவட்டம் குனிகல் அருகே நிலைதடுமாறிக் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 10 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
அப்போது இந்த காரை தொடர்ந்து வந்த மற்றொரு காரும் விபத்தில் சிக்கியதில் அதிலிருந்த இரண்டு பேரும் உயிரிழந்தார்கள். இதில் பலியான 10 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.