கருப்பு பணத்தை ஆட்டையை போட்ட பலே கில்லாடி… அதிர்ச்சியில் தி.மு.க., முக்கியப்புள்ளி..!

 

கருப்பு பணத்தை ஆட்டையை போட்ட பலே கில்லாடி… அதிர்ச்சியில்  தி.மு.க., முக்கியப்புள்ளி..!

வழக்கமாக அரசியல்வாதிகள் தான் மற்றவர்களுக்கு அல்வா கொடுப்பார்கள். ஆனால் இங்கு அரசியல்வாதிக்கு வியாபாரி அதிர்ச்சி அல்வா கொடுத்துள்ளார்.

வழக்கமாக அரசியல்வாதிகள் தான் மற்றவர்களுக்கு அல்வா கொடுப்பார்கள். ஆனால் இங்கு அரசியல்வாதிக்கு வியாபாரி அதிர்ச்சி அல்வா கொடுத்துள்ளார். black money

தி.மு.க., தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சி தொடர்பான புகார்களை விசாரிக்கிற, மாநில நிர்வாகி ஒருவர் பணமதிப்பு நீக்க நேரத்தில் தனது வீட்டில் கட்டு கட்டாக பதுக்கி வைத்திருந்த பழைய ரூபாய் நோட்டுகளை தனக்கு தெரிந்த வியாபாரியிடம் கொடுத்து புது நோட்டுகளாக மாற்றித்தர கேட்டு இருக்கிறார்.black money

வியாபாரியோ, நிர்வாகி கொடுத்த பணத்துக்கு சரிபாதி மட்டும் புது ரூபாய் கொடுத்து விட்டு அதற்கு மேல் இல்லை என்று கைவிரித்து விட்டாராம். இவ்வளவு நாளாக பணத்தை கேட்டு நொந்து போன அந்த நிர்வாகி இப்போது  சிலர் மூலமாக பஞ்சாயத்து வைத்துக் கொண்டு இருக்கிறார். தி.மு.க., பிரமுகரையே ஏமாற்றி விட்டார் என்றால் அந்த வியாபாரி கில்லாடி தான்.black money

கொடுத்தது கருப்பு பணம். அதற்கு உரிய நியாயமான பணத்தை கொடுத்து விட்டேன். அதற்கு மேல் கொடுக்க முடியாது. சட்டப்படி நடவடிக்கைக்கு போனாலும் நான் தயார். போறீங்களா… போய்த்தான் பாருங்களேன் என பஞ்சாயத்து பேச செல்வோரிடம் தில்லாக சொல்லி அனுப்புகிறாராம் அந்த வியாபாரி.