கருத்து கணிப்பு எல்லாம் தவுடு பொடியாகும்! நாங்கதான் ஜார்க்கண்டில் மீண்டும் ஆட்சி அமைப்போம்…. அடித்து சொல்லும் பா.ஜ.க…..

 

கருத்து கணிப்பு எல்லாம் தவுடு பொடியாகும்! நாங்கதான் ஜார்க்கண்டில் மீண்டும் ஆட்சி அமைப்போம்…. அடித்து சொல்லும் பா.ஜ.க…..

ஜார்க்கண்டில் இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள், தற்போதைய ஆளும் கட்சியான பா.ஜ.க. ஆட்சியை தக்க வைக்க வாய்ப்பில்லை என தெரிவித்து இருந்தன. ஆனால் நாங்கதான் மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என பா.ஜ.க. நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த நவம்பர் 30ம் தேதி தொடங்கி மொத்தம் 5 கட்டங்களாக நடைபெற்றது.  5வது மற்றும் இறுதி கட்டமாக ஜமா, ராஜ்மஹால் போரியோ, தும்கா உள்பட 16 தொகுதிகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதனையடுத்து வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. தனது ஆட்சியை தொடர்ந்து தக்கவைக்க வாய்ப்பில்லை என்றும், காங்கிரஸ் கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என ஆருடன் கூறின.

மெகா கூட்டணி

இன்று ஜார்க்கண்டில் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. ஜே.எம்.எம், காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி. கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி கட்சியினர் எப்படி நாமதான் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் நேற்று முதலே ராஞ்சி நகரின் பல பகுதிகளில் ஹேமந்த் சோரன், ராகுல் மற்றும் சோனியா காந்தியின் விளம்பர பதாகைகளை வைக்க தொடங்கி விட்டனர்.

லட்சுமணன் கிலுவா

அதேசமயம், கருத்து கணிப்பு எல்லாம் தவுடு பொடியாகும். நாங்கதான் ஜார்க்கண்டில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என பா.ஜ.க. நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில பா.ஜ.க. தலைவர் லட்சுமணன் கிலுவா கூறுகையில்,  எங்களது கண்கள் மற்றும் காதுகைளை தரையில் வைத்துள்ளோம். மற்றும் பா.ஜ.க. தலைமையில் அடுத்த அரசு அமையும் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம் என தெரிவித்தார்.