கருணாநிதி பிறந்த வீட்டையும் விட்டு வைக்காத கஜா புயல்: முழு விபரம்

 

கருணாநிதி பிறந்த வீட்டையும் விட்டு வைக்காத கஜா புயல்: முழு விபரம்

திருக்குவளையில் இருக்கும் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி பிறந்து, வளர்ந்த வீடும் கஜா புயலில் கடுமையாகச் சேதமடைந்துள்ளது.

திருவாரூர்: திருக்குவளையில் இருக்கும் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி பிறந்து, வளர்ந்த வீடும் கஜா புயலில் கடுமையாகச் சேதமடைந்துள்ளது.

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த கஜா புயலானது, மணிக்கு 120 கி.மீ வேகத்துடன் நாகப்பட்டினம் – வேதாரண்யம் இடையே கரையை கடந்துள்ளது. இப்புயலில் சிக்கி 40க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். ஏராளமான உயிரினங்கள், மரங்கள், வயல்கள் என அனைத்தும் நாசமாகி உள்ளது.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களாக அறியப்படும் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது.

அந்த வகையில், திருக்குவளையில் பராமரிக்கப்பட்டு வந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த வீடும், கஜா புயலில் பலத்த சேதமடைந்துள்ளது.

kalaignar house

கருணாநிதியின் மனதிற்கு மிக நெருக்கமானதாக அறியப்பட்ட அந்த இல்லம், ஆண்டு தோறும் வர்ணம் பூசப்பட்டு, முறையாக பராமரிக்கப்பட்டு வந்தது. அதேசமயம், நூலகமாகவும் அந்த இல்லம் இயங்கி வந்தது. இந்நிலையில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

மேலும், இந்த தகவல் திமுகவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மரம் விழுந்து சேதமடைந்துள்ள அந்த வீட்டைப் புனரமைத்து, மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என திமுகவினர் கூறி வருகின்றனர்.