கருணாநிதி நினைவிடத்திற்கு ஸ்டாலின் திடீர் விசிட்: மாலை சோனியா வருவதால் ஏற்பாடுகள் தீவிரம்!

 

கருணாநிதி நினைவிடத்திற்கு ஸ்டாலின் திடீர் விசிட்: மாலை சோனியா வருவதால் ஏற்பாடுகள் தீவிரம்!

இன்று மாலை கருணாநிதி நினைவிடத்திற்கு சோனியா காந்தி செல்ல இருப்பதால், அங்கு பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை: இன்று மாலை கருணாநிதி நினைவிடத்திற்கு சோனியா காந்தி செல்ல இருப்பதால், அங்கு பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான கலைஞர் மு.கருணாநிதி, கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி காலமானார். அவர் மறைந்ததையடுத்து, திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அவருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

அந்த சிலையை திறந்து வைப்பதற்காக, பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி இன்று சென்னை வந்திருக்கிறார். 4 ஆண்டுகளுக்குப் பின்னர் சோனியா, தமிழகம் வர இருப்பதால் சென்னை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கருணாநிதி சிலையை திறந்த பின் அவரின் நினைவிடத்திற்கு சோனியா காந்தி செல்ல இருப்பதால், மெரினா கடற்கரையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகளை இன்று நேரில் ஆய்வு செய்த மு.க.ஸ்டாலின், கருணாநிதி நினைவிடத்தை அலங்கரிப்பது குறித்து அங்குள்ள பணியாளர்களிடம் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதன்பின், அங்கிருந்து நேரே பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டிருக்கும், ராயப்பேட்டை YMCA திடலுக்கு சென்ற மு.க.ஸ்டாலின், அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வுகளை செய்து வருகிறார். அவருடன் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.