கருணாநிதி… ‘கலைஞர்’ ஆன கதை

 

கருணாநிதி… ‘கலைஞர்’ ஆன கதை

நடிகவேல் எம்.ஆர்.ராதா கருணாநிதி மீது தீராத அன்பு கொண்டவர். ஒரு முறை தான் நடிப்பதற்காக ஒரு நாடகம் எழுதித் தருமாறு கருணாநிதியிடம் கேட்டிருந்தார்

நடிகவேல் எம்.ஆர்.ராதா கருணாநிதி மீது தீராத அன்பு கொண்டவர். ஒரு முறை தான் நடிப்பதற்காக ஒரு நாடகம் எழுதித் தருமாறு கருணாநிதியிடம் கேட்டிருந்தார்.

kalaignar karunanidhi

அப்படி, நடிகவேல் எம்.ஆர்.ராதாவுக்காக ‘தூக்குமேடை’ என்று ஒரு நாடகத்தை எழுதிக் கொடுத்தார் கருணாநிதி. அந்த நாடகத்துக்கான  விளம்பர சுவரொட்டியில் தான் முதன்முதலில் ‘ கலைஞர் கருணாநிதி’ என்று அச்சிட்டு, விளம்பரப்படுத்தியிருந்தார் நடிகவேல் எம்.ஆர்.ராதா. 
‘கலைஞர்’ கருணாநிதி எழுதிய ‘தூக்கு மேடை’ என்று முதன் முதலில் எம்.ஆர்.ராதா ஆரம்பித்து வைத்தப் பெயர் அன்றிலிருந்து காலம் உள்ளவரையில் கழக கண்மணிகளிடத்தில் ‘கலைஞர் கருணாநிதி’ என்று நிரந்தரமாகவே நிலைத்து விட்டது.