‘கருக்கலைப்பு..மீண்டும் கர்ப்பம்’ : ஐரோப்பிய மாணவிக்கு நடந்த கொடுமை; சென்னை தொழிலதிபர் தலைமறைவு!

 

‘கருக்கலைப்பு..மீண்டும் கர்ப்பம்’ : ஐரோப்பிய மாணவிக்கு நடந்த கொடுமை; சென்னை தொழிலதிபர் தலைமறைவு!

பெண்ணிடம் திருமணம் செய்துகொள்வதாக உறுதி கூறி  கட்டாயப்படுத்திக்  கருக்கலைப்பு செய்துள்ளார்

ஐரோப்பிய நாட்டை  சேர்ந்த மாணவியை  காதல் வலையில் வீழ்த்தி கர்ப்பமாக்கிய தொழிலதிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த ரூமேஸ் அகமது என்ற 30 வயது நபர் ஒருவர் வெளிநாடுகளுக்கு இறால் ஏற்றுமதி செய்து வருகிறார். அதன்படி துபாய் சென்ற அவருக்கும் ஐரோப்பிய நாடான லித்வேனியாவிலிருந்து துபாயில் தங்கி படித்து வந்த மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

love

இவர்களது பழக்கம் காதலாக மாற அந்த மாணவி கர்ப்பமாகியுள்ளார். இதனால் அந்த பெண்ணை சென்னை அழைத்து வந்துள்ளார்  ரூமேஸ் அகமது.  பிறகு அந்த அப்பெண்ணிடம் திருமணம் செய்துகொள்வதாக உறுதி கூறி  கட்டாயப்படுத்திக்  கருக்கலைப்பு செய்துள்ளார். பிறகு மீண்டும் இவரும் துபாய் சென்று ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில்  அந்த பெண் மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார்.

preg

இதையடுத்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மாணவியை மீண்டும் சென்னை அழைத்து வந்த  ரூமேஸ் அகமது  எழும்பூரில் ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கவைத்துவிட்டுத் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் இதுகுறித்து எழும்பூர் போலீசில் அந்த மாணவி புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் ரூமேஸ் அகமதுவை  தேடி வருகின்றனர்.