கருகிய உடல்  உருகிய உள்ளம்- பலாத்காரம் செய்து பாதி எரிந்த பெண்ணுடல் -குப்பை போல வீசிய கொடுமை 

 

கருகிய உடல்  உருகிய உள்ளம்- பலாத்காரம் செய்து பாதி எரிந்த பெண்ணுடல் -குப்பை போல வீசிய கொடுமை 

உத்தரபிரதேசத்தின் ராய்பரேலி மாவட்டத்தில் ஒரு பெண்ணின் விசித்திரமான உடல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமையன்று ஹர்ச்சந்த்பூரில் ரே பரேலி-லக்னோ நெடுஞ்சாலையில் ஒரு  தாபா அருகே  பாதி எரிந்த நிலையில் இறந்த ஒரு பெண்ணின்  உடல் கண்டெடுக்கப்பட்டது . 

உத்தரபிரதேசத்தின் ராய்பரேலி மாவட்டத்தில் ஒரு பெண்ணின் விசித்திரமான உடல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமையன்று ஹர்ச்சந்த்பூரில் ரே பரேலி-லக்னோ நெடுஞ்சாலையில் ஒரு  தாபா அருகே  பாதி எரிந்த நிலையில் இறந்த ஒரு பெண்ணின்  உடல் கண்டெடுக்கப்பட்டது . 

woman-body-burnt

சென்ற சனிக்கிழமை,  சுமார் 25 வயதுடைய அந்த  பெண் பாலியல் பலாத்காரத்திற்குப் பிறகு எரிக்கப்பட்டார் என்று அஞ்சப்படுகிறது. முதலில் பள்ளியிலிருந்து  வந்த  குழந்தைகள் அந்த பெண்ணின் எரி ந்த சடலத்தை கண்டு அலறினர் . 
பெண்ணின் பாதி எரிந்த,  இறந்த உடலைப் பார்த்து, குழந்தைகள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறியதால் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வந்தனர் . பெண்ணின்  கைகளும் கால்களும் கட்டப்பட்டு அவளது தொண்டை இறுக்கி கட்டப்பட்டிருந்தது  . சடலத்தின் அருகே ஒரு பர்ஸ், வேதியியல் புத்தகம் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்ட  அந்த பெண்  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.