கமலுக்கு கொரோனோ என பீதியைக் கிளப்பிய மாநகராட்சி… தவறாக ஒட்டப்பட்டது என்று கமிஷனர் விளக்கம்!

 

கமலுக்கு கொரோனோ என பீதியைக் கிளப்பிய மாநகராட்சி… தவறாக ஒட்டப்பட்டது என்று கமிஷனர் விளக்கம்!

இன்று காலை நடிகர் கமலில் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள வீட்டின் முன்பு கொரோனா தனிமைப்படுத்தல் ஸ்டிக்கரை சென்னை மாநகராட்சி ஒட்டியது. இதனால் நடிகர் கமலுக்கு கொரோனா அச்சம் என்ற பீதி எழுந்தது. ஊடகங்களில் இந்த செய்தி வெளியாகவே, மாநகராட்சி ஊழியர் ஒருவர் வந்து அந்த ஸ்டிக்கரை கிழித்துவிட்டு சென்றார்.

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் வீட்டில் தவறுதலாக கொரோனா ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதாக மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை நடிகர் கமலில் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள வீட்டின் முன்பு கொரோனா தனிமைப்படுத்தல் ஸ்டிக்கரை சென்னை மாநகராட்சி ஒட்டியது. இதனால் நடிகர் கமலுக்கு கொரோனா அச்சம் என்ற பீதி எழுந்தது. ஊடகங்களில் இந்த செய்தி வெளியாகவே, மாநகராட்சி ஊழியர் ஒருவர் வந்து அந்த ஸ்டிக்கரை கிழித்துவிட்டு சென்றார்.

kamalhassan-876

இது குறித்து சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “நடிகர் கமல் வீட்டில் தவறுதலாக கொரோனா ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.