கமலுக்கு ஆப்படித்த நயன்தாரா: உண்மை இதுதான்?!…
நயன்தாரா நடிப்பில் நல்ல வரவேற்பை பெற்ற ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் உரிமையை கலர்ஸ் தமிழ் சேனல் வாங்கியுள்ளது.
தமிழ் சினிமா நாயகர்களுக்கு டஃப் கொடுக்கும் நாயகியாக மாறியிருக்கிறார். அவர் கலர்ஸ் தமிழ் சேனலில் தோன்றப் போகிறார் என்ற செய்திதான் கமலுக்கு ஆப்பு என பரவி வருகிறது.
இந்திய சினிமா ஆளுமைகளில் முக்கியமானவராக கருதப்படும் நம் கமல்ஹாசன், படம் நடிப்பது போக, ஸ்டார் விஜய் சேனலில் ஔிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வந்தார். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை கலர்ஸ் தமிழ் சேனல் இனி ஒளிபரப்பும் என வதந்தி கிளம்பியிருக்கிறது. அதே வேளையில், நயன்தாரா கலர்ஸ் தமிழில் தோன்றப் போகிறார் என்ற செய்தியும் பரவியுள்ளது.
Nayanthara on Colors Tamil???
Stay tuned to know more.. #ColorsTamil | #NayanonColorsTamil | #Staytuned pic.twitter.com/wgQSTbsOYD— Colors Tamil (@ColorsTvTamil) April 19, 2019
இந்த இரு செய்திகளையும் முடிச்சுப் போட்டு, பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை நயன்தாரா தொகுத்து வழங்கப் போகிறார் என யாரோ கலந்துகட்டி அடித்திருக்கிறார். அந்த வதந்தியும் வைரலாகி விட்டது. ஆனால் உண்மை என்னவென்றால், நயன்தாரா நடிப்பில் நல்ல வரவேற்பை பெற்ற ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் உரிமையை கலர்ஸ் தமிழ் சேனல் வாங்கியுள்ளது. அதனால் நயன்தாரா, கமலுக்கு ஆப்படித்ததாய் பரவி வரும் செய்தி பொய் மக்களே.
நயன்தாரா தற்போது ‘தர்பார்’ பட ஷூட்டிங் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். அவர் வதந்திகளை கண்டுகொள்வதில்லை என்பதால், அவரது தரப்பில் இருந்து இதற்கு எந்த பதிலும் இல்லை.