கனமழை; புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

 

கனமழை; புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டை: கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தின் சில இடங்களில் 4-ம் தேதியில் இருந்து 6-ஆம் தேதி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் பரவலான இடங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் கஜா புயலால் பாதித்த புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் புதுக்கோட்டையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் கணேசன் அறிவித்துள்ளார். இதேபோல் காரைக்காலிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது