கனமழை: எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை?

 

கனமழை: எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை?

கனமழை காரணமாக திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னை: கனமழை காரணமாக திருவாரூர்,  நாகை, புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த வரும் இரு தினங்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் மிதமான மழை பெய்யுமென வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கினாலும் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கனமழை காரணமாக திருவாரூர்,  நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.