கத்தியுடன் வந்த திருடன் ! காலை வாரிவிட்ட சாதனை பெண் !

 

கத்தியுடன் வந்த திருடன் ! காலை வாரிவிட்ட சாதனை பெண் !

கத்திமுனையில் திருட வந்த கொள்ளையனை காலைவாரிவிட்டு பெண் ஒருவர் பிடித்த சம்பவம் திண்டுக்கல்லில் நடந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கரட்டுப்பட்டி கிராமத்தில் மணி, வசந்தி தம்பதி வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் வளர்க்கும் செல்லப்பிராணி நேற்று இரவு திடீரென கூச்சலிட்டது. நள்ளிரவில் எதற்காக நாய் குறைக்கிறது என்று பார்க்க வசந்தி வெளியில் சென்று பார்த்துள்ளார். அப்போது கையில் கத்தியுடன் 2 மர்மநபர்கள் நின்று கொண்டிருந்தனர்.

கத்திமுனையில் திருட வந்த கொள்ளையனை காலைவாரிவிட்டு பெண் ஒருவர் பிடித்த சம்பவம் திண்டுக்கல்லில் நடந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கரட்டுப்பட்டி கிராமத்தில் மணி, வசந்தி தம்பதி வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் வளர்க்கும் செல்லப்பிராணி நேற்று இரவு திடீரென கூச்சலிட்டது. நள்ளிரவில் எதற்காக நாய் குறைக்கிறது என்று பார்க்க வசந்தி வெளியில் சென்று பார்த்துள்ளார். அப்போது கையில் கத்தியுடன் 2 மர்மநபர்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது அதில் ஒருவர் வசந்தியை தாக்கிவிட்டு நகை கொள்ளை அடிப்பதற்காக வசந்தியை நோக்கி ஓடிவந்துள்ளான். இதை சற்றும் எதிர்பாராத வசதி வேகமாக வந்த திருடனின் காலை வாரிவிட்டார். பின்னர் அந்த நபர் கத்தியை காட்டி மிரட்டியபோதும் பயம் இல்லாமல் கூக்கல் போட்டார். இதை பார்த்த மற்றொரு திருடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். இதையடுத்து அங்கு திரண்ட பொதுமக்கள் அந்த திருடனை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், அவன் பெயர் சண்முகம் என்றும் அவர் மீது பல்வேறு கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

theif

மேலும், திருடனிடம் இருந்து 50 சவரன் நகைகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுபோல் எத்தனை இடங்களில் சண்முகம் கைவரிசை காட்டியிருக்கிறான் என்பதை போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் சண்முகத்துடன் வந்து தப்பி ஓடிய நபரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். நள்ளிரவில் பெண்ணாக இருந்தும், திருடனை தைரியமாகப் போராடி பிடித்த வசந்தியை போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.