கணவருடன் தகராறு: பள்ளி காதலனை மணந்த இளம்பெண்: அதிர்ச்சி தரும் பின்னணி தகவல்கள்!

 

கணவருடன் தகராறு: பள்ளி காதலனை மணந்த இளம்பெண்: அதிர்ச்சி தரும் பின்னணி தகவல்கள்!

கணவருடன் கோபித்துக் கொண்டு தாய்வீட்டுக்குச் சென்ற பெண், பள்ளிப் பருவத்து காதலனைத் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் : கணவருடன் கோபித்துக் கொண்டு தாய்வீட்டுக்குச் சென்ற பெண், பள்ளிப் பருவத்து காதலனைத் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரியைச் சேர்ந்த இளம் பெண் சமீதா. இவருக்கும் சாலை நகரைச் சேர்ந்த உறவினர் சக்திவேல் என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போதே போட்டோ எடுப்பதில் மாப்பிள்ளை வீட்டாருக்கும், பெண் வீட்டாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதையே காரணம் காட்டி சமீதா சில மாதங்களுக்கு முன்பு கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்குச் சென்று விட்டார். சக்திவேல் நேரில் சென்று அழைத்தும் அவர் வீட்டிற்கு வர மறுத்துள்ளார். இதையடுத்து மனைவியுடன் இணைந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் சக்திவேல், திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றுள்ளார். அப்போது, மனைவி சமீதா கழுத்தில் புதுத் தாலியுடன், வேறொரு இளைஞருடன் கணவன் – மனைவியாக செல்வதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

vellore

இது குறித்து சமீதாவிடம் கேட்டபோது,சமீதாவுடன் கிரிவலம் வந்தவர், பள்ளிப் பருவத்து காதலன் என்பதும், தற்போது புதிதாக திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து, மனைவி சமீதா, தன்னை விவாகரத்து செய்யாமல், வேறொரு திருமணம் செய்து கொண்டதாக கூறி, போலீசில் புகார் அளித்தார். 

இதையடுத்து போலீசார் சமீதாவிடம் இது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, ‘சமீதா 11 ஆம் வகுப்பு படிக்கும்போதே, கார்த்திகை காதலித்துள்ளார். அதன் காரணமாக சமீதா  கர்ப்பமாகியுள்ளார். பின்பு சாதியை காரணம் கூறி  சமீதாவின் கர்ப்பத்தைக் கலைத்த குடும்பத்தினர், பாதுகாப்பாக இருக்க உறவினர் சக்திவேல் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இரண்டு மாதம் தங்கியிருந்த நிலையில், சக்திவேலுக்கும், சமீதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டதையடுத்து இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த நிலையில்தான், கணவர் சக்திவேலுடன் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்குச் சென்ற சமீதா, பழைய காதலன் கார்த்திகை சந்தித்து, திருமணம் செய்து கொண்டுள்ளது’ விசாரணையில் தெரியவந்துள்ளது

இதன் பிறகு, ஜோடியாகத் திருவண்ணாமலையில் ஜோடியாகக் கிரிவலம் வந்துள்ளனர். அப்போதுதான், சக்திவேல் தங்களைப் பார்த்ததாக சமீதா போலீசாரிடம் கூறியுள்ளார். முதல் கணவரை விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக சமீதா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .