கணவன் – மனைவிக்கு விவாகரத்து செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது: அமைச்சர் ஜெயக்குமார்

 

கணவன் – மனைவிக்கு விவாகரத்து செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது: அமைச்சர் ஜெயக்குமார்

கணவன் – மனைவி போல் இருந்த  மக்களுக்கும் பிளாஸ்டிக்குக்கும் தற்போது விவகாரத்து செய்யும் சூழல் உருவாகி இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை: கணவன் – மனைவி போல் இருந்த  மக்களுக்கும் பிளாஸ்டிக்குக்கும் தற்போது விவகாரத்து செய்யும் சூழல் உருவாகி இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக பிளாஸ்டிக்குகளுக்கு ஜனவரி 1-ம் தேதியில் இருந்து தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால் குறிப்பிட்ட சில பிளாஸ்டிக்குகளுக்கு தடைவிதிக்கக்கூடாது என சில அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர். அதேசமயம் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் தரப்பில் ஆதரவு பெருகி வருகிறது.

இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், கணவன் – மனைவி போல் இருந்த மக்களுக்கும், பிளாஸ்டிக்குக்கும் தற்போது விவாகரத்து செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக்கிற்கு முழுமையாக தடை விதிப்பது என்பது சாத்தியமில்லை என்றார்.