கணவன் கண்முன்னே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட புதுமண பெண்: காவு வாங்கிய செல்ஃபி மோகம்!

 

கணவன் கண்முன்னே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட புதுமண பெண்: காவு வாங்கிய செல்ஃபி மோகம்!

தம்பதியினர்  உறவுக்காரர்களான கனிதா, சினேகா, யுவராணி மற்றும் சந்தோஷ் ஆகியோருடன் ஊத்தங்கரையில் உள்ள தியேட்டருக்கு நேற்று   படம் பார்க்க சென்றுள்ளனர்.

கிருஷ்ணகிரி:  செல்ஃபி  எடுத்த போது  புதுமண பெண் உள்பட நால்வர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு. இவருக்கும் நிவேதா என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் புதுமண தம்பதியினர்  உறவுக்காரர்களான கனிதா, சினேகா, யுவராணி மற்றும் சந்தோஷ் ஆகியோருடன் ஊத்தங்கரையில் உள்ள தியேட்டருக்கு நேற்று   படம் பார்க்க சென்றுள்ளனர். இதையடுத்து   பாம்பாறு அணையில் நின்று  செல்ஃபி எடுத்துள்ளனர். 

SELFIE

அப்போது எதிர்பாராதவிதமாக கனிதா, சினேகா, யுவராணி, நிவேதா மற்றும் சந்தோஷ் ஆகிய 5  பேரும் அணைக்குள் தவறி விழுந்துள்ளனர்.இதைக்கண்ட பிரபு உடனடியாக யுவராணியை மீட்டுள்ளார். ஆனால்  அதற்குள் மற்ற நால்வரும் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். 

murder

இதை தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட கனிதா, சினேகா, யுவராணி மற்றும் சந்தோஷ் ஆகியோரின் உடல்களை மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.