கணவன் இறந்த சோகத்தில் மனைவியும் தற்கொலை…நிர்க்கதியாக நிற்கும் குழந்தைகள்!

 

கணவன் இறந்த சோகத்தில் மனைவியும் தற்கொலை…நிர்க்கதியாக நிற்கும் குழந்தைகள்!

என்னையும் குழந்தைகளையும் இப்படி விட்டுட்டு போயிட்டாரே என்று புலம்பி கொண்டிருந்துள்ளார். 

கணவன் இறந்த சோகத்தை தாங்க  முடியாமல் மனைவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் சிவிலியாங்குளத்தை சேர்ந்தவர் சங்கர். இவருக்கு செல்வராணி என்ற மனைவி மற்றும் குழந்தைகள்   உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சங்கர் பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச வயலுக்கு சென்ற போது  மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் செல்வராணிக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. என்னையும் குழந்தைகளையும் இப்படி விட்டுட்டு போயிட்டாரே என்று புலம்பி கொண்டிருந்துள்ளார். 

ttn

இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த செல்வராணி  விஷத்தை குடித்துள்ளார். இதையறிந்த அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் செல்வராணியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். இருப்பினும் செல்வராணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

ttn

இதனையடுத்து செல்வராணியின் தந்தை மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.