கணவனை கொலை செய்த மனைவி : வேறு பெண்ணுடன் ஓடி விட்டதாக நாடகம்!

 

கணவனை  கொலை செய்த மனைவி :  வேறு பெண்ணுடன் ஓடி விட்டதாக நாடகம்!

மங்களூரைச் சேர்ந்த முகமது சமீர் கொலை செய்யப்பட்ட வழக்கில், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொண்டு  மனைவியே கணவரை கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. 

மங்களூர் : மங்களூரைச் சேர்ந்த முகமது சமீர் கொலை செய்யப்பட்ட வழக்கில், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொண்டு  மனைவியே கணவரை கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. 

கொடைக்கானல் செல்லும் மலைச்சாலையில் கடந்த மாதம் 18ம் தேதி 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை தேவதானப்பட்டி போலீசார்  மீட்டனர். விசாரணையில் அவர் மங்களூரைச் சேர்ந்த முகமது சமீர் என்பது தெரியவந்ததால்,  உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

முகமது சமீர் கொலைச் சம்பவத்தில் அவரது மனைவிக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீசார்  விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் மங்களூரு விரைந்த போலீசார், அங்கு வாடகை கார் ஓட்டுநர் முகமது யாஷிப் உடன் சுற்றித்திரிந்த முகமது சமீரின் மனைவி ஃபர்தோஷை மடக்கிப் பிடித்து, தேவதானப்பட்டி கொண்டுவந்து விசாரித்தனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

murder

கடந்த மாதம் 14ம் தேதி கள்ளக்காதலன் முகமது யாஷிப்பின் காரில், பெங்களூருவிலிருந்து சேலம் சென்ற ஃபர்தோஷ், கணவர் முகமது சமீருக்கு இளநீரில் 20 தூக்க மாத்திரைகளைக் கலந்து  கொடுத்துள்ளார். மயக்க நிலையில் இருந்த சமீரை, கொடைக்கானல் கொண்டு சென்ற ஃபர்தோஷ், தனது கள்ளக்காதலன் முகமது யாஷிப் உடன் சேர்ந்து, சமீரை கழுத்தறுத்து கொலை செய்ததும், பின்னர் வனப்பகுதியில் வீசியெறிந்ததும் விசாரணையில் வெளிவந்தது. 

பின்னர் பெங்களூருவில் உள்ள தந்தை வீட்டிற்குச் சென்று, தனது கணவர் முகமது சமீர் வேறோரு பெண்ணுடன் ஓடிவிட்டதாக ஃபர்தோஷ் நாடகமாடியதும், 60 சவரன் நகைகளுடன் மாயமானதும் போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து  கொலை செய்ததை ஒப்புக்கொண்ட இருவரும் பெரியகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.