கணவனை கல்லால் அடித்து கொன்ற மனைவி: திருமணமான ஐந்தே மாதத்தில் நடந்த கொடூரம்!?

 

கணவனை கல்லால் அடித்து கொன்ற மனைவி: திருமணமான ஐந்தே மாதத்தில் நடந்த கொடூரம்!?

குடும்பத்தகராறு காரணமாகக் கணவனை  மனைவியே கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

தரங்கம்பாடி: குடும்பத்தகராறு காரணமாகக் கணவனை  மனைவியே கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாகை மாவட்டம் தரங்கம்பாடி  சேர்ந்தவர் சதீஷ்குமாரும் கலைமதியும் ஒருவரை ஒருவர் காதலித்து 5 மாதங்களுக்கு முன்  திருமணம் செய்து கொண்டனர்.திருமணமான சில  நாட்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

murder

இந்நிலையில் நேற்று முன்தினம்  கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.  இந்த தகராறு கைகலப்பாக மாற  ஆத்திரமடைந்த  கலைமதி கணவர் சதீஷ்குமாரை கல்லால் தாக்கியுள்ளார். அப்போது கலை மதியின் தந்தை நாகராஜ் சதீஷ் குமாரை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.  இந்த தாக்குதலில் 
 படுகாயமடைந்த சதீஷ்குமார், அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாகப் பலியானார். 

crime

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததோடு சதீஷ்குமார் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கலைமதியையும் நாகராஜையும் கைது செய்து விசாரித்து  வருவது குறிப்பிடத்தக்கது.