கட்சி குறித்து கேள்விகேட்டதும் வேகமாக நடையை கட்டிய ரஜினி!

 

கட்சி குறித்து கேள்விகேட்டதும் வேகமாக நடையை கட்டிய ரஜினி!

தர்பார் படப்பிடிப்பு முடிந்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பியுள்ளார். 

தர்பார் படப்பிடிப்பு முடிந்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பியுள்ளார். 

இயக்குநர்  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்  ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன் தயாரித்து வரும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக  நயன்தாரா நடித்து வருகின்றனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.ரஜினிகாந்த்  காவலராக நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கியது. தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் படத்தின் 2 போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

darbar

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் 18ந் தேதி தர்பார் படப்பிடிப்புக்காக மும்பை சென்றார். தற்போது சென்னை திரும்பியுள்ள அவர் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய ரஜினி, தர்பார் படம் நல்ல வந்திருக்கிறது என்றார். தொடர்ந்து நிருபர்களோ, கட்சி மற்றும் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு    குறித்து கேள்வி எழுப்பினர். ஆனால்  அதற்கு பதில் எதுவும் கூறாமல் அங்கிருந்து  வேகமாகவே நடையை கட்டினார் ரஜினி.  

ரஜினி வரும் டிசம்பர் மாதம் கட்சி தொடங்கவுள்ளதாகவும் அதற்கான அதற்கான  பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.