கட்சியும் வேண்டாம்… பொறுப்பும் வேண்டாம்… அதிமுகவிலிருந்து வெளியேறும் முன்னாள் அமைச்சர்!

 

கட்சியும் வேண்டாம்… பொறுப்பும் வேண்டாம்… அதிமுகவிலிருந்து வெளியேறும் முன்னாள் அமைச்சர்!

அதிமுகவில் அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் எம்எல்ஏ அறிவித்துள்ளார். 

அதிமுகவில் அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் எம்எல்ஏ அறிவித்துள்ளார். 

அதிமுக அம்மா பேரவை இணை செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் அறிவித்துள்ளார். இதுகுறித்து துணை முதலமைச்சர் 

பன்னீர் செல்வம் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் தோப்பு வெங்கடாசலம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ,தற்போதைய சூழ்நிலை காரணமாக கட்சி பொறுப்பை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார். முன்னதாக சட்டப்பேரவை உறுதி மொழி குழு தலைவர் மற்றும் வருவாய், சுற்றுச் சூழல் அமைச்சராக தோப்பு வெங்கடாசலம் இருந்தவர் என்பது குறிப்பிடதக்கது. அமைச்சர் கே.சி.கருப்பணன் உடனான கருத்து வேறுபாடு காரணமாக இந்த முடிவை தோப்பு வெங்கடாசலம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.