கடைசி நிமிடத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகன் குடும்பத்தினர்: மணமகன் எடுத்த அதிரடி முடிவு!

 

கடைசி நிமிடத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகன் குடும்பத்தினர்: மணமகன் எடுத்த அதிரடி முடிவு!

மணப்பெண் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் திருமணத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது

வேலூர்: தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை உறவினர் கள் நிறுத்தியதால், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வாழ்வு தர மாப்பிள்ளை காவல்நிலையம் சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் மாவட்டம் திப்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவருக்கும் பலன்சாத்துகுப்பம் பகுதியைச் சேர்ந்த ரோஜா பிரியா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெறவிருந்த கடைசி நிமிடத்தில் ரவியின் உறவினர்கள் திருமணத்தை நிறுத்தினர். மணப்பெண் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் திருமணத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. 

marriage

இதனால்  அதிர்ச்சியடைந்த மணப்பெண் வீட்டார், செய்வதறியாது திகைத்தனர். அப்போது  மாப்பிள்ளை ரவி வேலூர் வடக்கு காவல்நிலையத்தில் சென்று புகார் அளித்தார்.  எனது குடும்பத்தினர் என் திருமணத்தை நிறுத்திவிட்டனர். பெண்ணின் வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது. அதனால் நான் அவரையே திருமணம் செய்ய விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். இதனால்  இருவீட்டாரையும் காவல் நிலையத்திற்கு அழைத்த போலீசார், அவர்களிடம் மணமகனுக்கு திருமணத்தில் முழு சம்மதம் இருப்பதால் அவரை யாரும் தொல்லை செய்யக்கூடாது என்று மணமகன் வீட்டாரை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர். 

ravi

இதை தொடர்ந்து மணமகன் ரவி ரோஜா பிரியாவை பதிவுத்திருமணம் செய்து கொள்வதாகக் கூறி எழுதிக்கொடுத்துவிட்டு மணமகள் வீட்டுடன் கிளம்பியுள்ளார். இந்த சம்பவம் பலராலும் பாராட்டப்பட்டது.