கடைசி காலத்தில் பார்க்க மகன் இல்லை: 4 குழந்தைகளை பெற்றெடுத்த 40 வயது பெண்!

 

கடைசி காலத்தில் பார்க்க மகன் இல்லை: 4 குழந்தைகளை பெற்றெடுத்த 40 வயது பெண்!

ஒரு மகளுக்கு திருமணம் செய்துவிட்ட நிலையில் மகன் ஒருவர் சாலை விபத்தில் இறந்துவிட்டார்.

மகளுக்கு திருமணம் முடித்து வாய்த்த 40 வயது பெண் ஒருவர் மீண்டும் 4 குழந்தைகளைப் பெற்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை  ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் விஜயபுரா பகுதியை சேர்ந்தவர்கள் சகன்லால். இவரது மனைவி தாலிபாய். இந்த தம்பதிக்கு  இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருந்துள்ளனர். ஒரு மகளுக்கு திருமணம் செய்துவிட்ட நிலையில் மகன் ஒருவர் சாலை விபத்தில் இறந்துவிட்டார். இதனால் மகளுடன் சகன்லால் -தாலிபாய் தம்பதி வாழ்ந்து வந்துள்ளனர். 

pregnant

இருப்பினும் மகன் இறந்து விட்டதால் கடைசி காலத்தில்  யார் பார்த்து கொள்வார்கள் என்று கவலைப்பட்ட அந்த தம்பதி குழந்தை பெற்று கொள்ள நினைத்துள்ளனர். 40 வயதான  தாலிபாய் ஏற்கனவே குடும்பக்கட்டுப்பாடு செய்து கொண்டுள்ளார். இதனால்  ஆலோசனை கேட்க மருத்துவரை அவர்கள் அணுகியுள்ளனர். டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியதை அடுத்து தம்பதியினர் அதற்கு சம்மதித்தனர்.

இந்நிலையில் டெஸ்ட் டியூப் மூலம்  தாலிபாயிக்கு நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் இரண்டு ஆண்  குழந்தைகளும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். 40 வயதில் பெண் ஒருவர்  4 குழந்தைகளைப் பெற்றுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.