கடைக்குட்டி சிங்கம் படத்தின் ஜெராக்ஸா தேவராட்டம்?

 

கடைக்குட்டி சிங்கம் படத்தின் ஜெராக்ஸா தேவராட்டம்?

ஒரு படம் அதிரடியாக ஹிட்டடித்தால்,அந்த வகையான கதை கொண்ட படங்கள் அடுத்தடுத்து வருவது என்னவோ வழக்கம்தான்;அதுக்காக  அப்படியேவா எடுத்து வைப்பாங்க!? இந்தக் கேள்விதான் கடந்த இரண்டு வாரங்களாக காதும் காதும் வச்சமாதிரி கேட்கப்படுகிற கேள்வி!

ஒரு படம் அதிரடியாக ஹிட்டடித்தால்,அந்த வகையான கதை கொண்ட படங்கள் அடுத்தடுத்து வருவது என்னவோ வழக்கம்தான்;அதுக்காக  அப்படியேவா எடுத்து வைப்பாங்க!? இந்தக் கேள்விதான் கடந்த இரண்டு வாரங்களாக காதும் காதும் வச்சமாதிரி கேட்கப்படுகிற கேள்வி!

அப்படி என்ன நடந்தது என்று விசாரித்தால் மிக ரகசியமான குரலில் இயக்குனர் முத்தையா பெயரைச் சொல்கிறார்கள்.செய்தி இதுதான்-ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் கவுதம் கார்த்திக் நடிக்கும் படத்தை முத்தையா இயக்குகிறார்.மொத்தப் படமும் முடிந்து தற்போது போஸ்ட் புரடக்சன் வேலைகள் பல்வேறு இடங்களில் நடந்து கொண்டிருக்கிறது.

அந்த ஏரியாவில் இருக்கிற யாரோ படத்தின் கதை இதுதான் என்று நண்பர்களின் காதைக் கடிக்க, கார்த்தி நடிச்ச ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை அப்படியே எடுத்து வச்சிருக்காரு என்று சாலிகிராமம் காவேரி கார்னர் டீ கடை வரை பேச ஆரம்பித்துவிட்டார்கள்!

பாண்டிராஜ் இயக்கத்தில் அந்தப்படம் வெளிவந்து பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் போதே,இது என்னோட கதை என்று ஒரு இயக்குனர் பஞ்சாயத்து வைத்தார்.அப்புறம் அந்தப் பேச்சு ‘அடங்கிவிட்டது.அப்படியிருக்க, வெளிவந்து சில மாதங்கள் கூட ஆகவில்லை!அழட்டிக்கொள்ளாமல் அப்படியே எடுத்து வைத்திருக்கிறாராம் இயக்குனர் முத்தையா!?

காவேரி கார்னர் வரை வந்த செய்தி, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா காதுக்கு போகாமலா இருந்திருக்கும்!அவருக்கும் அந்த செய்தி போயிருக்கிறது.’அட போங்கப்பா… கிராமம்னா நாலு அக்கா தங்கச்சி,மாமன் மச்சினன் எல்லா வீட்டுலயும்தான் இருப்பாங்க!இது ஒரு கண்டுபிடிப்பா!?’ என்றாராம்! அட! அதானே?