கடன் பாக்கி பிரச்னை: பவர் ஸ்டார் மனைவியை கடத்திய 5 பேர் கொண்ட கும்பல்: உண்மை நிலவரம் என்ன?

 

கடன் பாக்கி பிரச்னை: பவர் ஸ்டார் மனைவியை கடத்திய 5 பேர் கொண்ட கும்பல்: உண்மை நிலவரம் என்ன?

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மற்றும் அவரது மனைவியை உதகையில் கடத்திவைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னை: நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மற்றும் அவரது மனைவியை உதகையில் கடத்திவைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவைச் சேர்ந்த மசூர் ஆலம் என்ற பைனான்சியரிடம் கோடிக்கணக்கில் கடன் வாங்கிய நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன், அதில் 95 லட்சம் ரூபாயை மட்டும் திருப்பிக்கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. 

powerstar

இது தொடர்பான வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், சென்னை வந்த மசூர் ஆலம், தமது அடியாட்களுடன் சேர்ந்து பவர்ஸ்டார் சீனிவாசனை உதகைக்கு கடத்திச் சென்றுள்ளார்.
பின்னர் பவர்ஸ்டாரின் மனைவி ஜூலியை உதகைக்கு வரவழைத்த அந்தக் கும்பல், அவரது பெயரில் அங்குள்ள பங்களாவை பத்திரப் பதிவு செய்து தர மிரட்டியுள்ளது.இதனிடையே, ஜூலியை பிணையக் கைதியாக வைத்துக் கொண்டு பவர் ஸ்டாரை சென்னை அனுப்பிய அந்தக் கும்பல் ஊடகங்களில் இந்தச் செய்தி வராமல் பார்த்துக் கொள்ளுமாறு மிரட்டியுள்ளது. ஆனால், சென்னை வந்த பவர் ஸ்டார் அளித்த புகார் பேரில் உதகை சென்று ஜூலியை மீட்ட போலீசார், 5 பேரையும் கைது செய்து சென்னை அழைத்து வந்துள்ளனர்.

powerstar

முன்னதாக கணவரை காணவில்லை என்றும் பவர் ஸ்டாரின் சொத்துக்களை தங்களது பெயரில் எழுதி வைக்கக் கூறி மர்ம நபர்கள் சிலர் மிரட்டல் விடுத்ததாகவும் ஜூலி  அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.