கடன் தொல்லை தீர்க்கும் சுக்கிர வார வழிபாடு

 

கடன் தொல்லை தீர்க்கும் சுக்கிர வார வழிபாடு

இன்று சுக்ர பிரதோஷம் இமாலையில் அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று மறக்காமல் வழிபடுங்கள். சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமையில் பிரதோஷம் வருவது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது

இன்று சுக்ர பிரதோஷம் இமாலையில் அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று மறக்காமல் வழிபடுங்கள். சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமையில் பிரதோஷம் வருவது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது

lingam

இன்று மே 31ம் தேதி வெள்ளிக்கிழமை சுக்கிர வாரப் பிரதோஷம் வாய்த்திருக்கிறது. இன்று மாலையில் சிவ தரிசனம் செய்து, சிவனையும், நந்தி தேவரையும் வணங்கினால், கடன் தொல்லைகள் எல்லாம் தீரும். கவலைகள் பறந்தோடும் என்பது உறுதி. சிவனுக்கும் மற்ற பரிகார தெய்வங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வழிபடுவோம். இன்றைய நாளில் நாம் தரிசிக்கும் நந்திதேவருக்கான முக்கியமான பூஜையே பிரதோஷ பூஜை. அருகம்புல், செவ்வரளி , வில்வம் கொண்டு சிவ நந்தி தரிசனம் செய்து, கண்ணாரத் தரிசித்து மனதார பிரார்த்தனை செய்யுங்கள். கடன் தொல்லைகளில் இருந்து விடுபடுங்கள்.