கஞ்சிக்கு வழியில்லாத ரஞ்சி வீரர் – ..ஆட வாய்ப்பில்லாததால் ஆள்மாறாட்டம் செய்து வாழும்   ஆந்திர கிரிக்கெட் வீரர்..

 

கஞ்சிக்கு வழியில்லாத ரஞ்சி வீரர் – ..ஆட வாய்ப்பில்லாததால் ஆள்மாறாட்டம் செய்து வாழும்   ஆந்திர கிரிக்கெட் வீரர்..

மத்திய குற்றவியல் போலீசால்  சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
புதுமுரு நாகராஜு, என்ற அந்த முன்னாள் ரஞ்சி கிரிக்கெட் வீரர் ஒரு நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியை தொடர்பு கொண்டு, அவர் இங்கிலாந்தில் நடக்கவிருக்கும்  யு -25 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஹைதராபாத்தில் அமைச்சர் தன்னை கே.டி.ராமராவின் பி.ஏ.என்று ஆள்மாறாட்டம் செய்த ஆந்திராவின் முன்னாள் ரஞ்சி கிரிக்கெட்  வீரர், மத்திய குற்றவியல் போலீசால்  சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
புதுமுரு நாகராஜு, என்ற அந்த முன்னாள் ரஞ்சி கிரிக்கெட் வீரர் ஒரு நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியை தொடர்பு கொண்டு, அவர் இங்கிலாந்தில் நடக்கவிருக்கும்  யு -25 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், ஐ.பி.எல்.போட்டியில் விளையாடும்போது, தனக்கு அவர்களது  நிறுவனம் நிதியுதவி செய்தால், அவர்களது நிறுவனத்தின் சின்னத்தை அந்த வீரர் பயன்படுத்தும் கிட்டில் அச்சிடப்படும் என்றும் அது கே.டி.ஆர் அவர்களால் தன்னிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் அந்த நிறுவன நிர்வாக அதிகாரியை நம்பவைத்தார் .
அது உண்மை என்று நம்பிய அந்த அதிகாரி,  ரூ.3.30 லட்சத்தை நகராஜுவின் வங்கிக் கணக்கிற்கு மாற்றினார்.அதற்கு பின்னர், நகராஜுவிடமிருந்து  எந்த பதிலும் இல்லாததால் அவர் ஏமாற்றப்பட்டதை  உணர்ந்து போலீசில் புகார் அளித்தார்.நகராஜு அவரது தொலைபேசி பதிவுகள் மற்றும் வங்கி கணக்கு விவரங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு, நாகராஜு பிசிசிஐ தலைமை தேர்வாளர் எம்.எஸ்.கே.பிரசாத் போல் ஆள்மாறாட்டம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஆந்திரப் பிரதேச காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.