கஜா புயல்: 22 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

 

கஜா புயல்: 22 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கஜா புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள 22 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

சென்னை: கஜா புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள 22 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் இன்று அதிகாலை 3.30 மணியளவில் நாகை, வேதாரண்யம் அருகே கரையை கடந்ததையடுத்து கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. அதேசமயம் பல்வேறு இடங்களில் பரவலாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், கனமழை காரணமாக ஜா புயல் காரணமாக பல்வேறு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாகை, கடலுர், ராமநாதபுரம், மதுரை, திருப்பூர், திருவாருர், புதுக்கோட்டை, தஞ்சை, சிவங்கை, அரியலூர், தேனி, விழுப்புரம், திருச்சி,  கரூர், திண்டுக்கல்,  காரைக்கால், சேலம், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர், தூத்துக்குடி, கோவை, ஈரோடு, ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.