கஜா புயல் கடலூர் – பாம்பன் இடையே கரையை கடக்கும்- வானிலை ஆய்வு மையம்

 

கஜா புயல் கடலூர் – பாம்பன் இடையே கரையை கடக்கும்- வானிலை ஆய்வு மையம்

கடலூர் – பாம்பன் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னை: கடலூர் – பாம்பன் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கி 10 நாட்களுக்கும் மேலாகியுள்ள நிலையில், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இப்புயலுக்கு கஜா என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. கஜா புயல் காரணமாக அதிகனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கஜா புயல் கடலூர் – பாம்பன் இடையே வருகிற 15-ம் தேதி கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், புயல் கரையை கடக்கும் போது காற்று அதிகளவில் வீசும் எனவும், கரையை கடக்கும் போது கஜா புயல் வலுவிழக்கும் சூழலும் உருவாகும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புயலானது நாகையில் இருந்து 800 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், கஜா புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளது எனவும் எச்சரித்துள்ளது.