ஓ.பன்னீர்செல்வம் இதற்காகத்தான் யாகம் நடத்தினார்: மு.க.ஸ்டாலின் விளக்கம்

 

ஓ.பன்னீர்செல்வம் இதற்காகத்தான் யாகம் நடத்தினார்: மு.க.ஸ்டாலின் விளக்கம்

தகுதி நீக்க வழக்கில் இருந்து தப்பிக்கவே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் யாகம் நடத்தினார் என மு.க.ஸ்டாலின்  குற்றம்சாட்டியுள்ளார்.

கரூர்: தகுதி நீக்க வழக்கில் இருந்து தப்பிக்கவே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் யாகம் நடத்தினார் என மு.க.ஸ்டாலின்  குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருமண விழா ஒன்று பேசுகையில், கொடநாடு விவகாரத்தில் முதல்வர் கொலைக் குற்றவாளியாக சிறைக்கு செல்லவிருக்கிறார். அதனால் மீண்டும் முதல்வர் பதவி தனக்கு கிடைக்க வேண்டும் என துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தலைமை செயலகத்தில் இருக்கும் தனது அறையில் யாகம் வளர்த்திருக்கிறார் என குற்றம்சாட்டினார். ஸ்டாலினின் இந்த குற்றச்சாட்டு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று மக்கள் மத்தியில் பேசிய மு.க.ஸ்டாலின் தகுதி நீக்க வழக்கில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக கோட்டையில் ஓ.பன்னீர்செல்வம் யாகம் நடத்தி உள்ளார். இது பற்றி விளக்கம் கேட்டால் யாகம் நடத்தவில்லை, சாமி மட்டுமே கும்பிட்டேன் என்று விளக்கம் அளித்திருக்கிறார். யாகம் நடத்த அது என்ன உங்கள் அப்பன் வீட்டு சொத்தா? மக்களின் வரிப் பணத்தில் உருவான கோட்டையில் ஏன் யாகம் நடத்தினீர்கள்? பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்திற்கும் தேர்தல் வர வாய்ப்புள்ளது என்றார்.