ஓரே நாளில் சவரனுக்கு ரூ.208 உயர்ந்தது தங்க விலை !
கடந்த சில நாட்களாகக் குறைந்து வந்த தங்க விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டு தொடக்கம் முதல் உயர்ந்து கொண்டே வந்த தங்க விலை, திடீரென அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து தங்க விலை சற்று குறைந்தாலும் கூட தங்க விலை ரூ.30 ஆயிரத்திற்கு மேலாகவே நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாகக் குறைந்து வந்த தங்க விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.26 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.3,888க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.208 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.31,104க்கு விற்கப்படுகிறது.
மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.49.60க்கு விற்கப்படுகிறது. அதன் படி கிலோவிற்கு ரூ.200 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.49,600க்கு விற்கப்படுகிறது.