ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும் அதிமுக டெபாசிட் வாங்காது: டிடிவி தினகரன் அதிரடி

 

ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும் அதிமுக டெபாசிட் வாங்காது: டிடிவி தினகரன் அதிரடி

நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுக்கு ரூ 10,000 கொடுத்தாலும் அதிமுக டெபாசிட் வாங்காது என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

தருமபுரி: நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுக்கு ரூ 10,000 கொடுத்தாலும் அதிமுக டெபாசிட் வாங்காது என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் தருமபுரியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளரும், ஆர்.கே.நகர் எம்.எல்.ஏவுமான டிடிவி தினகரன், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் டிடிவி தினகரன் பேசுகையில், திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தலை அறிவித்தனர். ஆனால் கடந்த டிசம்பர் மாதமே தலைமை செயலாளர் தேர்தல் வேண்டாம் என்று தேர்தல் கமி‌ஷனுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதிமுக வேட்பாளரையும் அறிவிக்காமல் விட்டனர். ஆனால் தேர்தலை சந்திக்க தயார் என்று அதிமுக அமைச்சர்கள் வாய் ஜாலம் காட்டினர். ஒருபக்கம் தேர்தலை நிறுத்த சொல்லிவிட்டு மறுபக்கம் தேர்தலை சந்திக்க தயார் என்று மக்களிடம் நடித்து காட்டினர்.

20 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த தேர்தல் கமி‌ஷன் மட்டுமல்ல அதிமுக-வும் பயப்படுகிறது. பாராளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட அதிமுக வெற்றி பெறாது. ஓட்டுக்கு ரூ. 10 ஆயிரம் கொடுத்தால் கூட அதிமுக டெபாசிட் வாங்க முடியாது. திருவாரூரில் தேர்தல் நடந்தால் ஆர்.கே நகர் போல திருவாரூரிடம் தி.மு.க. டெபாசிட் வாங்குவது சந்தேகம்தான். 20 தொகுதி தேர்தல் நடந்தால் அமமுக வெற்றி பெறும். மற்ற கட்சிகள் டெபாசிட் இழக்கும் என்றார்.