ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை…பேஸ்புக்கில் நேரலை செய்து அசிங்கப்படுத்திய துணிச்சல் பெண்!

 

ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை…பேஸ்புக்கில் நேரலை செய்து அசிங்கப்படுத்திய துணிச்சல் பெண்!

அதிர்ச்சியடைந்த அப்பெண் இளைஞரை கையும் களவுமாக பிடித்து, பேஸ்புக்கில் நேரலை செய்தார்.

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்திலிருந்து நேற்று அதிகாலை காசர்கோடு நோக்கி தனியார் சொகுசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. அதில் இருந்த இளைஞர் ஒருவர், பேருந்தில் பயணித்த இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் இளைஞரை கையும் களவுமாக பிடித்து, பேஸ்புக்கில் நேரலை செய்தார். மேலும் இதுகுறித்து   மலப்புரம் கோட்டக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

ttn

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார்,  அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் கைதானவர் பெயர்  முனாவீர் என்பதும் அவர்  கேரளாவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

ttn

ஓடும் பேருந்தில்  பெண் பயணி பாலியல்  சீண்டலுக்கு ஆளாகியுள்ள சம்பவம் பேருந்தில் பயணித்த சகபயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ காட்சிகளும்  இணையத்தில் வைரலாகி வருகிறது.