ஒரே வருடத்தில் இறந்த டெல்லியின் மூன்று முதலமைச்சர்கள்!

 

ஒரே வருடத்தில் இறந்த டெல்லியின் மூன்று முதலமைச்சர்கள்!

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, அர்விந்த் கெஜ்ரிவால், பாபா ராம்தேவ், உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சுஷ்மாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

மதன்லால் குரானா, ஷிலா தீட்சித், சுஷ்மா ஸ்வராஜ் என தனது மூன்று முன்னாள் முதல்வர்களை டெல்லி ஒரே வருடத்தில் அடுத்தடுத்து இழந்து நிற்கிறது உடல் நலக்குறைவால் மரணமடைந்த சுஷ்மா ஸ்வராஜுக்கு கட்சிப் பேதமின்றி அனைத்து கட்சித் தலைவர்களும் அன்னாரின் பூத உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி சுஷ்மாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். தன் பிரதான சீடர்களில் ஒருவரான சுஷ்மாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த அவரின் அரசியல் குரு அத்வானி கண்கலங்கினார்.

Leaders pay their last respect

மதியம் வரை அவருடைய வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் உடல், அதன்பின் தொண்டர்களின் இறுதி மரியாதைக்காக பாஜகவின் கட்சி அலுவலகத்திற்கு எடுத்துவரப்படும். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, அர்விந்த் கெஜ்ரிவால், பாபா ராம்தேவ், உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சுஷ்மாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.