ஒரே நேரத்தில் இரண்டு காதலிக்கு தாலி கட்டி மனைவியாக்கிய இளைஞர்!

 

ஒரே நேரத்தில் இரண்டு காதலிக்கு தாலி  கட்டி மனைவியாக்கிய  இளைஞர்!

அந்த இளைஞர் அந்த பெண்களிடம் பேசி இருவரையும் ஒரே நேரத்தில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். 

உத்தர பிரதேசத்தில் இரண்டு காதலிகளுக்கு ஒரே நேரத்தில் இளைஞர் தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தர பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் இரு பெண்களை காதலித்து வந்துள்ளார். இரண்டு பெண்களுக்கும் தெரியாமல் ஜாலியாக காதலித்து வந்த அந்த இளைஞருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் இரண்டு பெண்களும் விஷயம் அறிந்து இளைஞருடன் சண்டை போட்டனர். இருப்பினும் யாரும் அந்த இளைஞரை விட்டுத்தர முன்வரவில்லை. இதனால் அந்த இளைஞர் அந்த பெண்களிடம் பேசி இருவரையும் ஒரே நேரத்தில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். 

ttn

அப்போது எடுக்கப்பட்ட வீடியோவானது  இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர்களின் திருமணத்திற்கு இளைஞர் மற்றும் 2 பெண்களின் வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.