ஒரே நாளில் வாய் புண்களை சரியாக்கும் உணவு வைத்தியம்

 

ஒரே நாளில் வாய் புண்களை சரியாக்கும் உணவு வைத்தியம்

வயிற்றில் புண்கள் ஏதேனும் இருந்தால் கூட, அதன் பாதிப்பு வாய் புண்களின் மூலமாக வெளிப்படும். முதலில் எதனால் வாய் புண் வந்தது என்று தெரிந்துக் கொள்ளுங்கள்.

வயிற்றில் புண்கள் ஏதேனும் இருந்தால் கூட, அதன் பாதிப்பு வாய் புண்களின் மூலமாக வெளிப்படும். முதலில் எதனால் வாய் புண் வந்தது என்று தெரிந்துக் கொள்ளுங்கள்.

அதிகம் நீர் அருந்தாவிட்டாலும், வாயில் புண்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. வாயில் புண் வந்து விட்டால் உணவு எடுத்துக் கொள்வது மட்டுமல்லாமல், பேசுவது, தண்ணீர் குடிப்பது என்று எல்லாமே கஷ்டம் தான். நமது அன்றாட உணவு வகைகளிலேயே இதற்கான வைத்தியங்கள் இருக்கின்றன. அதுவும் எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாமல். அந்த மாதிரியான இயற்கை உணவு வைத்திய முறைகளைப் பார்க்கலாம்… வாய் புண் ஒரே நாளில் குணமாக, அரை மூடித் தேங்காயை அரைத்து, அதிலிருந்து பால் எடுத்துக் கொள்ளுங்கள். சிறிது சிறிதாக தேங்காய் பாலை புண் உள்ள இடத்தில் படும் படியாக ருசித்து குடித்து வாருங்கள். வீட்டில் தேன் இருந்தால் ஒரு கரண்டி தேங்காய் பாலில் சிறிதளவு தேன் சேர்த்து மிக்ஸ் செய்து வாயில் புண் உள்ள இடத்தில் பூசிவிடுங்கள். ஒரே நாளில் நல்ல பலன் தெரியும்.

வாய் புண்ணுக்கு வல்லாரை கீரை சிறந்த நிவாரணம் தரும். வல்லாரை கீரையை இடித்து அல்லது நன்றாக அரைத்து சிறிதளவு சாறு எடுத்து வாய்ப் புண்ணில் பூசினால் வாய் புண் குணமாகும். கற்றாழை ஜெல் சிறிதளவு எடுத்து அதில் கொஞ்சமாக நெய் சேர்த்து கலவையாக புண் இருந்த இடத்தில் பூசி வந்தாலும் வாய்ப்புண் குணமாகும். அகத்தி இலைகளை சிறிது நெய் ஊற்றி வதக்கி சாப்பிட்டாலும் வயிற்றில் உள்ள புண்கள் குணமாவதுடன் வாய்புண்ணும் குணமாகி விடும். அகத்தி இலையை பால் சொதி, குழம்பு போன்றவற்றிலும் சேர்த்து சாப்பிடலாம். வெண்டைக்காயை நெய் விட்டு ஒரு நிமிடம் வதக்கி, அப்படியே சாப்பிட்டால் வயிற்றுப் புண்களும் வாய் புண்ணும் குணமாகும். நெல்லிக்காயும் கூட வாய்ப்புண்களுக்கு சிறந்த நிவாரணம் தரும்.