ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது: ஓபிஎஸ் திட்டவட்டம்!

 

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது: ஓபிஎஸ் திட்டவட்டம்!

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகப் பசும்பொன் முத்துராமலிங்க தேவரும், மூக்கையாத்தேவரும் சகோதரர்களாக இருந்து பாடுபட்டனர்.

உசிலம்பட்டி: ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தால் தமிழக மக்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

பி.கே.மூக்கையாத்தேவர் 40வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதற்கான விழா மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடந்த நிலையில் அதில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார். 

ops

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகப் பசும்பொன் முத்துராமலிங்க தேவரும், மூக்கையாத்தேவரும் சகோதரர்களாக இருந்து பாடுபட்டனர். அதனால் அவரது நினைவு தினத்தில்  அவரை போற்றுகிறேன்’ என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தால் தமிழக மக்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஜெயலலிதா ஆட்சியை  தற்போதுள்ள அரசும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தி வருகிறது’ என்று கூறினார். 

vaiko

முன்னதாக ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்துக்கு முக ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு கூறிவருவது குறிப்பிடத்தக்கது.