ஒரேயொரு கருத்தால் மூத்த நீதிபதியிடமிருந்து அனைத்து பணிகளும் பறிப்பு!

 

ஒரேயொரு கருத்தால் மூத்த நீதிபதியிடமிருந்து அனைத்து பணிகளும் பறிப்பு!

பாட்னா உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி ராகேஷ் குமாரிடமிருந்து அனைத்து  பணிகளும் திரும்பப்பெறப்பட்டுள்ளது. 

பாட்னா: பாட்னா உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி ராகேஷ் குமாரிடமிருந்து அனைத்து  பணிகளும் திரும்பப்பெறப்பட்டுள்ளது. 

rakesh

ஐஏஎஸ் அதிகாரி கே.பி.ராமய்யாவின் முன்ஜாமீன் மனு மீதான ஆணையை பாட்னா உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி ராகேஷ் குமார் நேற்று பிறப்பித்தார்.அப்போது பாட்னா நீதிமன்றத்தில் ஊழல் நடைபெறுவதாகக் குற்றச்சாட்டினார்.  இந்த ஆணையில் பாட்னா நீதிமன்றத்தில் ஊழல் நடைபெறுவதாகக் குறிப்பிட்டிருந்தார். மூத்த நீதிபதி ராகேஷ் குமாரின் இந்த கருத்து பரபரப்பைக் கிளப்பியது. 

court

இந்நிலையில் பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அம்ரீஸ்வர் பிரதாப் சாஹி, நீதிபதி ராகேஷ் குமாரிடமிருந்து அனைத்து நீதிபதி பணிகளும் திரும்பப் பெறப் பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் நீதிபதி ராகேஷ் முன்னிலையில் உள்ள அனைத்து வழக்குகளும் திரும்பப்பெறப்பட்டுள்ளது.