’ஒரு ரெண்டாயிரம், நாலு 500 ரூபா நோட்டு எது பெருசு?’…ஐ.சி.சி.யை துவம்சம் செய்யும் அமிதாப் பச்சன்…

 

’ஒரு ரெண்டாயிரம், நாலு 500 ரூபா நோட்டு எது பெருசு?’…ஐ.சி.சி.யை துவம்சம் செய்யும் அமிதாப் பச்சன்…

இந்தித் திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் தன் பங்குக்கு செமையாகக் கிண்டலடித்திருக்கிறார்.

உலகக்கோப்பை கிரிக்கெட்டின் இறுதிக்கட்ட முடிவை உலகம் முழுக்க உள்ள அனைவருமே கழுவிக்கழுவி ஊத்திக்கொண்டிருக்கும் நிலையில் இந்தித் திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் தன் பங்குக்கு செமையாகக் கிண்டலடித்திருக்கிறார்.

cricket

உலக கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டம் டை ஆன பிறகு கடைபிடிக்கப்பட்ட சூப்பர் ஓவரும் சமன் ஆனதால் அதிக பவுண்டரி அடித்த இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) இந்த விதிமுறை கேலிக்கூத்தானது, அதை தூக்கி எறிய வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர். நேற்று இது குறித்து தனது கருத்தை வெளியிட்ட மாஸ்டர் சச்சின் டெண்டுல்கரும் இன்னொரு சூப்பர் ஓவர் ஆடியிருக்கலாமே தவிர தற்போது எடுக்கப்பட்ட முடிவு மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று கூறியிருந்தார்.

 

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் எப்போதும் பிசியாக இருக்கும் அமிதாப் பச்சனும் பவுண்டரி விதிமுறையை  வித்தியாசமாக விமர்சித்துள்ளார். ‘உன்னிடம் 2 ஆயிரம் ரூபாய் ஒரே நோட்டாக இருக்கிறது. என்னிடம் ரூ.2 ஆயிரம் நான்கு 500 ரூபாய் நோட்டுகளாக இருக்கிறது. நம்மில் யார் பணக்காரர் என்று கேட்க அதற்கு நான்கு 500 ரூபாய் நோட்டு வைத்துள்ளவரே பணக்காரர்’ என்று ஐ.சி.சி. சொல்வது போல் தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டல் செய்துள்ளார்.

இதே போல் இந்தி நடிகரும், அரசியல்வாதியுமான பரேஷ் ரவால் தனது டுவிட்டர் பதிவில் ‘டோனியின் கையுறையை மாற்றுவதற்கு பதிலாக ஐ.சி.சி. முட்டாள்தனமான இத்தகைய விதிமுறைகளை மாற்ற வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.