ஒரு தாயின் நீதிக்கான இறுதி குரல்: ஜிவி பிரகாஷ் ஆறுதல் ட்வீட்!
அற்புதம்மாளுக்கு ஆறுதல் கூறும் வகையில் ஜிவி பிரகாஷ் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை: அற்புதம்மாளுக்கு ஆறுதல் கூறும் வகையில் ஜி.வி.பிரகாஷ் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளர், நடிகர் என்பதையும் தாண்டி அவ்வப்போது சமூகம் சார்ந்த பிரச்சினைக்குக் குரல் கொடுத்து வருகிறார். மக்களை பாதிக்கும் அடித்தள பிரச்சனைகளையும் கையில் எடுப்பவர். உதாரணத்துக்கு ஜல்லிக்கட்டு போராட்டம், அனிதா மரணம், விவசாயிகள் பிரச்சனை, அரசியல் விவகாரம் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்த நிலையில் இவர் தற்போது பேரறிவாளன் விவகாரத்திலும் நியாயம் கேட்டுள்ளார். அற்புதம்மாள் இன்று 28 வருஷம் ஆகியும் என் பிள்ளை இன்னும் வரவில்லை என்றும் எங்களுக்கு இன்னும் விடியவில்லை என்று கண்ணீருடன் பேசியுள்ளார். இவர்களின் பேச்சு இந்த தமிழக மக்களையே கலங்கச் செய்தது.
ஒரு தாயின் நீதிக்கான இறுதி குரல் இதுவாகவே இருக்கட்டும்.
இத்தாயின் வேதனை தணிப்போம். நீதியை விதைப்போம்.#29YearsTooMuchGovernor pic.twitter.com/YVmSjgPxs6
— G.V.Prakash Kumar (@gvprakash) June 11, 2019
தற்போது ஜிவி பிரகாஷ் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ‘ஒரு தாயின் நீதிக்கான இறுதி குரல் இதுவாகவே இருக்கட்டும். இத்தாயின் வேதனை தணிப்போம். நீதியை விதைப்போம்’ என்று பதிவிட்டுள்ளார்.