‘ஒருவருக்கு ஒரு லட்டு இலவசம்’..இனிமேல் சலுகை லட்டு கிடையாது : திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு !

 

‘ஒருவருக்கு ஒரு லட்டு இலவசம்’..இனிமேல் சலுகை லட்டு கிடையாது : திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு !

சர்வ தரிசனம் டிக்கெட் பெற்று நேரடியாகத் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கும், வைகுண்டம் காத்திருப்பு அறைக்குச் செல்லும் சலுகை விலையில் லட்டு வழங்கப்பட்டு வந்தது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் வெவ்வேறு மாநிலங்களிலிருந்து பல்லாயிரக் கணக்கான மக்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, வெளிநாடுகளிலிருந்தும் வந்து மக்கள் ஏழுமலையானைத் தரிசனம் செய்கின்றனர்.இந்த கோவிலில், அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதையில் நடைப்பயணமாக வரும் பக்தர்களுக்கும், சர்வ தரிசனம் டிக்கெட் பெற்று நேரடியாகத் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கும், வைகுண்டம் காத்திருப்பு அறைக்குச் செல்லும் சலுகை விலையில் லட்டு வழங்கப்பட்டு வந்தது.

ttnh

மக்களுக்குச் சலுகை விலையில் வழங்கப்பட்டு வந்த லட்டுகளை முற்றிலுமாக ரத்து செய்யப் போவதாகவும் தரிசனத்திற்குச் செல்லும் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்டு இலவசமாக வழங்கவும் மீதமுள்ள லட்டுகளை, ஒரு லட்டு 50 ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளதாகவும் சமீபத்தில் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது. அதன் படி, இன்று முதல் சுவாமி தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ttn

இது குறித்துப் பேசிய தேவஸ்தான அதிகாரிகள், வழக்கமாக உற்பத்தி செய்யும் லட்டுகளை விட 1 லட்சம் லட்டு அதிகமாகத் தயாரித்து வருவதாகவும், சலுகை விலையில் வழங்கப்பட்டு வந்த லட்டுகள் இன்று முதல் நிறுத்தப் படுவதாகவும் மக்களுக்கு லட்டு தேவைப்பட்டால் ஒரு லட்டு ரூ.50 கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.