ஒன்றரை லட்சம் கேட்டு ஓங்கியடித்த கணவர் ! ஒரே அடியில் துடிதுடித்து உயிரிழந்த மனைவி !

 

ஒன்றரை லட்சம் கேட்டு ஓங்கியடித்த கணவர் ! ஒரே அடியில் துடிதுடித்து உயிரிழந்த மனைவி !

மகராஷ்டிரா மாநிலத்தில் வரதட்சணை கொடுமையால் மனைவி உயிரிழந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடிய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தானே பகுதியில் துஷார் சாம்ரே என்பவருக்கும் காஞ்சன் என்பவருக்கும் 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக வரதட்சணை கூடுதலாக கேட்டு கணவர் கொடுமைப் படுத்தி வந்ததாக தெரிகிறது. இதனால் அவ்வப்போது குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

மகராஷ்டிரா மாநிலத்தில் வரதட்சணை கொடுமையால் மனைவி உயிரிழந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடிய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தானே பகுதியில் துஷார் சாம்ரே என்பவருக்கும் காஞ்சன் என்பவருக்கும் 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக வரதட்சணை கூடுதலாக கேட்டு கணவர் கொடுமைப் படுத்தி வந்ததாக தெரிகிறது. இதனால் அவ்வப்போது குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

husband and wife

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று மனைவியுடன் சண்டை போட்ட கணவர் ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்துடன் வருமாறு கூடி அவரை அடித்துள்ளார். ஆனால் கணவர் அடித்ததில் மயங்கி விழுந்து மனைவி உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த துஷார், மனைவியின் உடலை மின்விசிறியில் துணியால் தொங்கவிட்டு தற்கொலை செய்து கொண்டது போல் காட்சிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து காஞ்சனாவின் பெற்றோர் மருமகன் மீது போலீசில் புகார் அளித்தனர். மகள் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே இல்லை என புகார் மனுவில் தெரிவித்தனர்.

arrest

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை  மேற்கொண்டதில் மனைவியை அடித்ததில் உயிரிழந்துவிட்டதாகவும், வேண்டுமென்றே கொலை செய்யவில்லை என்றும், போலீசுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டதுபோல் நாடகம் ஆடியதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து கணவர் துஷார் சாம்ரே மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.