ஒன்பதாம் வகுப்பு மாணவியை  ‘ஸ்கூல் டெஸ்டு’க்கு அனுப்பாமல்  ‘மெடிக்கல் டெஸ்டு’க்கு அனுப்பிய கொடுமை ….

 

ஒன்பதாம் வகுப்பு மாணவியை  ‘ஸ்கூல் டெஸ்டு’க்கு அனுப்பாமல்  ‘மெடிக்கல் டெஸ்டு’க்கு அனுப்பிய கொடுமை ….

ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் நடந்த ஒரு கொடூரமான சம்பவத்தில், ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒரு இளைஞரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது . இந்த சம்பவம் குண்டூரு மாவட்டம் பொன்னூரு மண்டலத்தின் முள்ளுகதுரு கிராமத்தில் நடந்துள்ளது.

ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் நடந்த ஒரு கொடூரமான சம்பவத்தில், ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒரு இளைஞரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது . இந்த சம்பவம் குண்டூரு மாவட்டம் பொன்னூரு மண்டலத்தின் முள்ளுகதுரு கிராமத்தில் நடந்துள்ளது. மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞன், அவளுடைய பெற்றோருக்கு தகவல் கொடுத்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்ததால் பயந்துபோனார்  சிறுமி .

பயம் இருந்தபோதிலும், சில நாளுக்கு பிறகு சிறுமி தான் சந்தித்த கொடூரத்தைப் பற்றி பெற்றோருக்குத் தெரிவித்தாள். அதைக்கேட்டு அதிர்ச்சியுற்ற அவர்கள் அப்பெண்ணை ஏன் இதை முதலிலேயே சொல்லவில்லையென திட்டினார்கள் .பிறகு அவர் தனது பெற்றோரின் உதவியுடன் பொன்னூரு கிராம காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்பெண்ணை மெடிக்கல் டெஸ்டுக்கு அனுப்பிவைத்தனர் ,.