ஒண்ணுமில்லாததுக்கு எல்லாம் ஓடிவந்து அட்டனென்ஸ் போடுகிற கஸ்தூரிக்கு இதெல்லாம் தெரியுமா தெரியாதா!?
காலையில் தூங்கி எழுந்ததும் இன்னைக்கு தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, இன்னைக்கு எந்த நடிகரோட தூக்கத்தை கெடுத்திருக்கிறார் என்று பிரேக்கிங் நியூஸ் கொடுக்கிற மாதிரி,பாடகி சின்மையும் களத்தில் இறங்கிட்டார்.
சென்னை: காலையில் தூங்கி எழுந்ததும் இன்னைக்கு தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, இன்னைக்கு எந்த நடிகரோட தூக்கத்தை கெடுத்திருக்கிறார் என்று பிரேக்கிங் நியூஸ் கொடுக்கிற மாதிரி,பாடகி சின்மயியும் களத்தில் இறங்கிட்டார்.
எப்பவோ முடிஞ்சு போன கவிஞர் வைரமுத்து பஞ்சாயத்தை தூது தட்டி,தேசிய மகளிர் ஆணையத்துக்கு ஒரு புகாரை தட்டிவிட்டார்.அதைத்தொடர்ந்து மீண்டும் ராதாரவி மீது குற்றச்சாட்டு வைத்து பரபரப்பை கிளப்பியிருக்கிறார். இது,மீ டூ பஞ்சாயத்து இல்லை!
ராதாரவி,தொடர்ந்து சினிமா விழாக்களில் ஆபாசமாகவும் அருவருப்பாகவும் பேசி வருகிறார்.அது குறித்து யாருமே கேள்வி கேக்க மாட்டேங்கிறீங்களே ஏன்!?தவிர,அவர் பேசுகிற பேச்சு எல்லாமே இளைஞர்களை பாலியல் குற்றம் செய்ய தூண்டுவது போலவே இருக்கு’என்று கொந்தளித்திருக்கும் சின்மயி, ’நடிகைகளின் கன்னித்தன்மையை பரிசோதனை செய்ய வேண்டும்’என்று ராதாரவி ஒரு விழாவில் பேசியிருப்பது குறித்து வன்மையாக கண்டித்திருக்கிறார்.
Respected Sir,
The past few months Mr Radha Ravi has been shaming women, encouraging men to rape, making rape jokes at Audio launch events; asking for virginity tests for heroines, banned me&others from the Dubbing Union for speaking up.
How come no one questions that venom, sir? https://t.co/mwY1ewK47a— Chinmayi Sripaada (@Chinmayi) March 1, 2019
டப்பிங் யூனியனிலிருந்து சின்மயியை ராதாரவி வெளியேற்றியதிலிருந்தே சின்மயி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ராதாரவி மீது அட்டாக் பண்ணி, சின்மயி பதிவு போடுவதென்னவோ உண்மைதான்.அதற்காக ராதாரவியும் கிடைக்கிற மேடைகளில் சின்மயிக்கு பதில் சொல்வதாக நினைத்து,எல்லை மீறிய வார்த்தைகளால் எல்லை மீறுவது என்ன நியாயம்!?
சின்மயி இப்படி ஒரு குற்றச்சாட்டு வைத்திருப்பதில் என்ன தவறு இருக்கிறது! நடிகைகளின் கன்னித்தன்மை குறித்த பேச்சுக்கு நடிகைகளே கண்டனம் தெரிவித்திருக்க வேண்டாமா!ஒண்ணுமில்லாததுக்கு எல்லாம் ஓடிவந்து அட்டனென்ஸ் போடுகிற கஸ்தூரிக்கு இதெல்லாம் தெரியுமா தெரியாதா!?