ஒட்டு மொத்த கதர் சட்டைகளையும் வாரித்தூக்கும் பாஜக… தமிழகத்தில் காங்கிரஸ்காரரை வைத்து பகீர்..!

 

ஒட்டு மொத்த கதர் சட்டைகளையும் வாரித்தூக்கும் பாஜக… தமிழகத்தில் காங்கிரஸ்காரரை வைத்து பகீர்..!

முன்னாள் எம்.பி.,க்களின் வாரிசு, முன்னாள் எம்.எல்.ஏ.,க்களை எல்லாம் பா.ஜ.கவுக்கு இழுத்துட்டு வருவதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.

த.மா.கா முன்னாள் எம்.பி., காங்கிரஸ் கூடாரத்தை காலி பண்ணி விடுகிறேன் என உறுதி கொடுத்திருக்கிறாராம். 

த.மா.கா முன்னாள் எம்.பி. நரசிம்மன் சமீபத்தில் பா.ஜ.கவில் இணைந்து இருக்கிறார்.  அந்தக் கட்சியில் காலியாக இருக்கிற மாநில தலைவர் பதவியை பிடிக்கிற முயற்சியில் மேலிட தலைவர்கள் சிலரை டெல்லியில் பார்த்து காய் நகர்த்திட்டு இருக்கிறார்.  தமிழக காங்கிரஸ் கட்சியில் இருக்கிற முன்னாள் எம்.பி.,க்களின் வாரிசு, முன்னாள் எம்.எல்.ஏ.,க்களை எல்லாம் பா.ஜ.கவுக்கு இழுத்துட்டு வருவதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அந்த வகையில் பெரம்பலுார் முன்னாள், எம்.எல்.ஏ., திருச்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. என ரெண்டு பேருக்கு முதல் கட்டமாக துாண்டில் போட்டிருக்கிறார்,.

பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா சென்னைக்கு வரும்போது இவர்களை எல்லாம், பா.ஜ.கவில் சேர்த்து  தன் கெத்தை காட்ட திட்டம் போட்டிருக்கிறார். gk vasan

அதேபோல் பிரதமர் நலம் விசாரித்ததில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ரொம்பவே பூரித்துப்போய் விட்டார். சீன அதிபர் சந்திப்புக்காக பிரதமர் மோடி சமீபத்தில் சென்னைக்கு வந்தபோது விமான நிலையத்தில் அவரை முதல்வர், துணை முதல்வர் என பலரும் வரவேற்றனர். தே.மு.தி.க., சார்பாக பிரேமலதா போயிருந்தார். அவங்களுக்கு ஒரு கும்பிடு மட்டும் போட்ட பிரதமர், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சால்வை அணிவித்த போது அவர் கையை பிடித்து நலம் விசாரித்தார். அப்போது,  ‘நாம அடுத்த சந்தர்ப்பத்தில் நிறைய பேசலாம்’ என பிரதமர் சொல்ல அதைக் கேட்டு, ஜி.கே.வாசன் ரொம்பவே பூரித்து போய் கிடக்கிறார்.