“ஐயோ ,எரியுதே ,எரியுதே “ஹோலியில் வண்ணப்பொடிகளோடு ஆசிட் வீச்சு -உடல் வெந்து வேதனைப்படும் சிறுவன் ..

 

“ஐயோ ,எரியுதே ,எரியுதே “ஹோலியில் வண்ணப்பொடிகளோடு ஆசிட் வீச்சு -உடல் வெந்து வேதனைப்படும் சிறுவன் ..

மகாராஷ்டிராவின் புனேவின் பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில், குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் குழந்தைகள் வண்ணங்களுடன் விளையாடி ஹோலி கொண்டாடப்பட்டது. அப்போது  நடைபெற்ற ஹோலி கொண்டாட்டத்தில் ஓர் 11 வயது சிறுவன் தரை துடைக்கும் ஆசிட் கிளீனரை 9 வயது சிறுவன் மீது வீசினான்

மகாராஷ்டிராவின் புனேவின் பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில், குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் குழந்தைகள் வண்ணங்களுடன் விளையாடி ஹோலி கொண்டாடப்பட்டது. அப்போது  நடைபெற்ற ஹோலி கொண்டாட்டத்தில் ஓர் 11 வயது சிறுவன் தரை துடைக்கும் ஆசிட் கிளீனரை 9 வயது சிறுவன் மீது வீசினான், இதில் அந்த 9 வயது சிறுவன் உடலில் தீக்காயம் ஏற்பட்டது.

acid-attack

அந்த 11 வயது சிறுவனுக்கு அது ஆசிட் கலந்திருப்பதால் உடலில் தீக்காயம் ஏற்படுத்தும் என்று தெரியாது. ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் வண்ணப்பொடிகளுடன் சேர்த்து அதையும் வீசியதால் உடலில் எரிச்சல் உண்டானது.
பிறகு அந்த 9 வயது சிறுவன் வீட்டுக்கு வந்தபோது உடலில் கடுமையான எரிச்சலை உண்டானதால், அவனின் உடையை கழட்டி பார்த்த பெற்றோர் உடல் முழுவதும் தீக்காயம் இருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றனர் .பிறகு அவனை அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர் .இந்த சம்பவம் பற்றி  போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது