ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான்முதல் வெற்றி: தொடர் தோல்வியால் துவண்ட விராட் அணி
ஐபிஎல் தொடரில் ராயஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான போட்டியின் மூலம் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது ராஜஸ்தான் அணி.
ஜெய்பூர்: ஐபிஎல் தொடரில் ராயஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி முதல் வெற்றியை பெற்றுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின், ஜெய்பூரில் நடந்த நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு-ராஜஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய விராட் கோலி மற்றும் பார்திவ் படேல் சிறப்பாக ஆடி வந்த நிலையில் கோலி, 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இவரை அடித்து விளையாடிய, பெங்களூரு அணிவீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க,
20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.5 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை எடுத்து வெற்றி பெற்றனர். இதன் மூலம் ஐபிஎல் போட்டியின் முதல் வெற்றியை ராஜஸ்தான் அணி பதிவு செய்துள்ளது.
அதே சமயம், தொடர் தோல்விகளால் ராயஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பட்டியலில் இறுதி இடத்தை பிடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
இதையும் வாசிக்க: ‘உங்கள் அளவுக்கு அனுபவம் இல்லை’: சசிகலாவை வைத்து எடப்பாடியை கலாய்த்த உதயநிதி