ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பேசுகிறார் ஆதிதிராவிடர் பள்ளி மாணவி ! தமிழக மாணவிக்கு அழைப்பு விடுத்தது ஐக்கிய நாடுகள் சபை !

 

ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பேசுகிறார் ஆதிதிராவிடர் பள்ளி மாணவி ! தமிழக மாணவிக்கு அழைப்பு விடுத்தது ஐக்கிய நாடுகள் சபை !

ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் உரையாற்ற தமிழகத்தை சேர்ந்த கல்லூரி மாணவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளது.

ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் உரையாற்ற தமிழகத்தை சேர்ந்த கல்லூரி மாணவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளது.
முதலில் ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி பிரமலதா மதுரை மாவட்டம் இளமனூர் கிராமத்தை சேர்ந்தவர்.

UN council

8ம் வகுப்பு படிக்கும்போது தமிழ்நாடு அரசின் மனித உரிமை கல்வி பயின்று மனித உரிமைக் கல்வி வகுப்புகளில் 2008ஆம் ஆண்டிலேயே பங்குபெற்றவர் பிரமலதா. இந்நிலையில் தற்போது கல்லூரியில் படித்து வரும் பிரமலதா அக்டோபர் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மனித உரிமை கல்வி மூலம் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் உரிமைகளை மேம்படுத்துவது குறித்து பிரமலதா பேசவிருக்கிறார்.

UN council

இதற்காக ஐக்கிய நாடுகள் சபை உயர் ஆணையர் அலுவலகத்திலிருந்து மாணவிக்கு அழைப்பு வந்ததுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசுப் பள்ளியில் படித்த மாணவி ஒருவர் முதன்முறையாக ஐநா சபையில் பேச இருப்பதால் பிரேமலதாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இதனால் உற்சாகம் அடைந்துள்ளதாகவும், மிகவும் பெருமையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் பிரமலதா.

Student Premalatha

ராமநாதபுரம் முகமது தஸ்தகீர் ஆசிரியர் பயிற்சி கல்லுாரி மாணவி அப்ரின் வஜிஹா, செய்யதம்மாள் கல்லுாரி மாணவி மகேஸ்வரி ஆகியோர் ஐக்கிய நாடுகள் சபையின் மாணவப் பிரதிநிதிகளாக நியமிக்கப்படவுள்ளனர் என்ற செய்தியும் ஏற்கனவே நமக்கு பெருமை சேர்த்துள்ளது.