ஏப்ரல் 20 முதல் சுங்கச்சாவடிகள் இயங்க மத்திய அரசு அனுமதி..!

 

ஏப்ரல் 20 முதல் சுங்கச்சாவடிகள் இயங்க மத்திய அரசு அனுமதி..!

இந்தியவில் கொரோனா வைரஸ்  வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் வரும் மார்ச் 24 ஆம் தேதி பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவை  பிறப்பித்தார். அதன் படி, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியவில் கொரோனா வைரஸ்  வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் வரும் மார்ச் 24 ஆம் தேதி பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவை  பிறப்பித்தார். அதன் படி, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை மீறி வீட்டை விட்டு வெளியே வரும் நபர்களுக்கு போலீசார் கடுமையான தண்டனை விதித்து வருகின்றனர். அதே போல ஒரு மாநிலத்திற்கும் மற்றொரு மாநிலத்திற்கும் இடையேயான அத்தியாவசிய போக்குவரத்து தவிர, மற்ற அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ttn

தமிழகத்திலும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட அவசர பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்காக மட்டும் 200 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதனால், சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து கடந்த 26 ஆம் தேதி முதல் எந்த சுங்கச்சாவடிகளிலும் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்தது. 

இந்நிலையில் ஏப்ரல்  20 ஆம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்டிருப்பதால் வரும் 20 ஆம் தேதி முதல் சுங்கச்சாவடிகள் இயங்கும், சுங்கவரி வசூலிக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து சுங்கச்சாவடிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.