‘ஏண்டி இந்த கொரானா நேரத்திலேயும் வாய மூட மாட்டியா “சண்டை போட்ட மனைவி -மண்டையை உடைத்த கணவன்.. 

 

‘ஏண்டி இந்த கொரானா நேரத்திலேயும் வாய மூட மாட்டியா “சண்டை போட்ட மனைவி -மண்டையை உடைத்த கணவன்.. 

பெங்களூருவில் டொட்டேரி பகுதி சர்வதேச விமான நிலைய சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு  மார்ச் 23ம் தேதியன்று பசவராஜு என்ற 42 வயது கணவனும் 35 வயதான சாவித்ரம்மா என்ற மனைவியும் சென்றனர். அந்த கோவிலில் ரங்கநாத் என்ற ஒரு சாமியார் அந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக ஒரு நம்பிக்கை மக்களிடம் உள்ளது.

பெங்களூருவில் டொட்டேரி பகுதி சர்வதேச விமான நிலைய சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு  மார்ச் 23ம் தேதியன்று பசவராஜு என்ற 42 வயது கணவனும் 35 வயதான சாவித்ரம்மா என்ற மனைவியும் சென்றனர். அந்த கோவிலில் ரங்கநாத் என்ற ஒரு சாமியார் அந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக ஒரு நம்பிக்கை மக்களிடம் உள்ளது. இதனால் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்ளும் இந்த தம்பதிகள் தங்களின் மகளோடு அந்த சாமியாரை பார்க்க சென்றார்கள். அவர்கள் போன அன்று மத்திய அரசால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அவர்கள் அந்த கோவிலிலேயே தங்கி விட்டனர் .அங்கேயே சாமியாரின் உதவியால் சமைத்து சாப்பிட்டனர்.

crime-scene-8

செவ்வாயன்று  பசவராஜுக்கும் அவரின் மனைவிக்கும் சண்டை மூண்டுள்ளது ,இதனால் கோபமடைந்த பசவராஜ் மனைவியை கோவிலின் சுவற்றில் உள்ள ஒரு கல்லில் இடித்து மண்டையை உடைத்து கொலை செய்தார். பிறகு அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். இதனால் அருகிலுள்ளவர்கள் போலீசில் இந்த கொலை பற்றி புகாரளித்தனர், போலீசார் தலைமறைவான விவசாயி பசவராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.